பரமக்குடி, மே 28: பரமக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் மதுரை அணி முதலிடம் பெற்று பரிசு கோப்பையை கைப்பற்றியது. பரமக்குடியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. வேகா கால்பந்து கழக செயலாளர் ராஜசேகர் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டிகளில் ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. லீக் முறையில் நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தில் மதுரை பாலு மெமோரியல் அணியினர் முதலிடம் பெற்று பரிசு கோப்பையை கைப்பற்றினார்கள்.
இரண்டாவது பரிசை சிவகங்கை மாவட்டம் பெரும்பச்சேரி கிராம இளைஞர் அணியினர் பெற்றனர். பரிசுகளை அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, பிரபல மருத்துவர் அகிலா ரெங்கநாதன், அம்மா பேரவை வடமளையான், சந்திரசேகர், அதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் வின்சென்ட் ராஜா ஆகியோர் அளித்தனர்.